இந்தியா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு..!

Published On 2025-08-11 19:08 IST   |   Update On 2025-08-11 19:08:00 IST
  • இந்திய பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
  • ஜெலன்ஸ்கியுடன் பேசியது மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரான மோடி, உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியுடன் இன்று டெலிபோன் மூலம் பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதிலும், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைக் கேட்பதிலும் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன்- ரஷியா இடையில் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷியா போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை.

வருகிற வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்பை ரஷிய அதிபர் புதின் நேரடியாக சந்திக்கிறார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News