விவசாயிகள் நலனை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது- பிரதமர் மோடி
- வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
- நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
டெல்லி:
டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று, பல்லுயிர் பெருக்கம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. மேலும் அரசுகளும் அதைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் டாக்டர். சுவாமிநாதன் ஒரு படி மேலே சென்று உயிரியல் மகிழ்ச்சி என்ற கருத்தை வழங்கினார். இன்று, இந்த யோசனையையே நாங்கள் இங்கே கொண்டாடுகிறோம். பல்லுயிர் பெருக்கத்தின் வலிமையுடன், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர். சுவாமிநாதன் கூறுவார்.
எம்.எஸ். சுவாமிநாதனை சந்திப்பது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக இருந்தது. அறிவியல் என்பது வெறும் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்தில் பயன்படுத்துவது மற்றும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றியது. இதை அவர் தனது பணி மூலம் நிரூபித்தார். இன்றும் கூட, அவரது கருத்துக்கள் இந்தியா விவசாயத் துறையில் காணப்படுகின்றன. அவர் உண்மையிலேயே அன்னை பாரதியின் ரத்தினம்.
பேராசிரியர் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு நமது அரசுக்குக் கிடைத்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
விவசாயிகள் நலனே இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாகும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
விவசாயிகள் நலனை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.