இந்தியா

RSS அமைப்பின் நூற்றாண்டு சிறப்பு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

Published On 2025-10-01 16:15 IST   |   Update On 2025-10-01 16:15:00 IST
  • ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
  • சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் சிறையில் அடைக்கப்பட்டார்

நாளைய தினம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நூற்றாண்டு கொண்டாத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கியதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சிறப்பு ரூ. 100 நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய மோடி, "ஆங்கிலேய ஆட்சியில் நடந்த கொடுமைகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கடுமையாக போராடினர். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் உட்பட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News