இந்தியா

பிரதமர் மோடி

மைசூர் அரண்மனையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி - பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2022-06-21 01:39 GMT   |   Update On 2022-06-21 01:39 GMT
  • கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும் 75 நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு:

ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015ல் அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.

Tags:    

Similar News