இந்தியா

தாயாரிடம் ஆசி பெறும் பிரதமர் மோடி

தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி

Published On 2022-08-28 05:31 IST   |   Update On 2022-08-28 05:31:00 IST
  • பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.
  • நேற்று தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.

அகமதாபாத்:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில் பங்கேற்ற பிரதமர் மோடியும் ராட்டையில் நூல் நூற்றார்.

இதையடுத்து, அகமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள 984 அடி நீளமும், 45 அடி அகலமும் உள்ள நடைபாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபா பென்னை சந்தித்துப் பேசினார். அவரிடம் ஆசி பெற்றார். கட்ச் மாவட்டத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்.

Tags:    

Similar News