இந்தியா

ராஜஸ்தானில் 2 நாட்களில் 25க்கும் மேற்பட்ட தெருநாய்களை சுட்டுக்கொன்ற ஆசாமிகள் - வீடியோ வைரல்

Published On 2025-08-07 21:49 IST   |   Update On 2025-08-09 06:29:00 IST
  • விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.
  • வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

ராஜஸ்தானில் 2 நபர்கள் 2 நாட்களில் 25க்கும் மேற்ப்பட் தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம், நவல்கர் பகுதியில் உள்ள குமாவாஸ் கிராமத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 25க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரண்டு நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டன.

வீடியோவில், கிராமத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு ஆண்கள் தெருநாய்களைத் துரத்திச் சென்று அவற்றைச் சுடுவதும். விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News