பஹல்காம் தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை தடுப்பதற்கான பாகிஸ்தானின் சதி: பிரதமர் மோடி
- பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது
- இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செனாப் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், கத்ரா- ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காகவும் அம்மாநிலம் சென்றுள்ளார்.
கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* பாகிஸ்தான் மனித நேயம், சுற்றுலா, காஷ்மீரிகளின் "rozi-roti"-க்கு எதிரானது, அதனால்தான் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது
* பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டது.
* காஷ்மீர் மக்களின் வருமானத்தை நிறுத்துவதற்கான பாகிஸ்தான் சதிதான் பஹல்காம் தாக்குதல்.
* இந்தியா பயங்கரவாதத்திடம் அடிபணியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
* பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் பெயரை கேட்கும் போதெல்லாம், அவமானகரமான தோல்வியை நினைவு கூறும்.
* பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் அதிக அளவில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். சிறிய அளவில் சேதம் அடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.