இந்தியா

ப.சிதம்பரம்

நிதி மந்திரி சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் - ப.சிதம்பரம்

Published On 2022-09-14 02:21 IST   |   Update On 2022-09-14 02:21:00 IST
  • சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
  • பணவீக்கத்தை பற்றி நிர்மலா சீதாராமன் கவலைப்படவில்லை.

புதுடெல்லி:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி மிக விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது! உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News