இந்தியா

'ஆபேரஷன் சிந்தூர்' அன்று பிறந்த குழந்தைக்கு 'சிந்தூரி' என பெயரிட்ட பெற்றோர்

Published On 2025-05-09 07:31 IST   |   Update On 2025-05-09 07:31:00 IST
  • பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
  • பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாட்னா:

பஹல்காம் தாக்குலுக்கு பழிதீர்க்க பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட 9 இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியது. 'ஆபேரஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த அதிதீவிர துல்லிய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் 'ஆபரேஷன் சிந்தூர்'ரின்போது பிறந்த குழந்தைக்கு 'சிந்தூரி' என பெயரிடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையான 'ஆபேரஷன் சிந்தூர்'ரின்போது அந்த பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த குழந்தைக்கு சிந்தூரி என பெயரிட்டுள்ளனர்.

''பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நன்னாளை நினைவுகூரும் வகையில் எங்களுடைய பெண்ணுக்கு சிந்தூரி என பெயரிட்டுள்ளோம்" என குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Tags:    

Similar News