இந்தியா

துவரம் பருப்பு, உளுந்து இறக்குமதிக்கு கட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

Published On 2023-12-29 02:47 GMT   |   Update On 2023-12-29 02:47 GMT
  • இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
  • உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதுடெல்லி:

இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதி, 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தது.

இந்நிலையில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதியை, 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags:    

Similar News