இந்தியா

சமூகநீதி போராட்டங்களின் தொடக்கம் வைக்கம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-12 12:32 IST   |   Update On 2024-12-12 14:11:00 IST
  • எதிர்ப்பு தெரிவித்த மண்ணிலேயே பெரியாருக்கு பாராட்டு விழா நடப்பது தான் திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி.
  • வைக்கம் போராட்டத்தை போன்றே நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சரித்திரத்தில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என மலையாளத்தில் உரையை தொடங்கிய முதலமைச்சர் கூறியதாவது:

* வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை காண கலைஞர் இல்லையே என வருந்துகிறோம்.

* வைக்கம் போராட்டம் எத்தனை கம்பீரமானதோ அதைப்போலவே நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது, அனைவருக்கும் பாராட்டுகள்.

* எதிர்ப்பு தெரிவித்த மண்ணிலேயே பெரியாருக்கு பாராட்டு விழா நடப்பது தான் திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி.

* கல்வியில் சிறந்து விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமான கேரளாவில் நினைவகம் உள்ளது பெருமை.

* கேரளாவிற்கு வரும் அனைவரும் நினைவகம் சென்று பார்த்து வைக்கம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

* வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.

* வைக்கம் போராட்டத்தில் இருமுறை கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் துன்பங்களை அனுபவித்தார்.

* எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழிப்புடன் வெற்றி பெற வைத்தவர் பெரியார் என அண்ணா கூறி உள்ளார்.

* சமூகத்தை விழிப்புடன் வெற்றி பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ் தென்றல் திருவிக 'வைக்கம் வீரர்' என பெரியாரை பாராட்டினார்.

* அண்ணா கூறியதைப்போல் வைக்கம் வெற்றியின் சின்னம்; சமூக புரட்சியின் அடையாளமாக வைக்கம் திகழ்கிறது.

* பெரியாரை எதிர்த்த மண்ணில் அவருக்கு விழா எடுப்பது தான் சமூகநீதியின் வெற்றி. இனி அடைய போகும் வெற்றிகளுக்கான சின்னம் வைக்கம் நினைவகம்.

* வைக்கம் போராட்டத்தை போன்றே நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் தொடங்கிய பல சமூக நீதி போராட்டங்களுக்கான தொடக்கம் வைக்கம் போராட்டம். சமூக நீதி வரலாற்றில் இந்த நாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

* வைக்கத்தில் 5 மாதம் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டார் பெரியார்.

* பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய ஊரில் அவருக்கு புகழ்மாலை என்பது பெருமையாக உள்ளது.

* இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் பினராயி விஜயன்.

* இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

* எல்லாவற்றையும் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது. மன மாற்றம் முக்கியம்.

* சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News