இந்தியா

4 ஆயிரம் பாதுகாப்பு பணிகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்: உமர் அப்துல்லாவுக்கு மெகபூபா முப்தி கடிதம்

Published On 2025-05-19 16:42 IST   |   Update On 2025-05-19 16:42:00 IST
  • முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு.
  • ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்த பணியை வழங்கினால், வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.

ஜம்மு-காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கும் நிலையான காவலர் பணிக்கு (static guard duties) சுமார் 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இளைஞர்கள் அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

உமர் அப்துல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மெகபூபா முஃப்தி கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள மிகவும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற உங்கள் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு குறித்து எனது ஆழ்ந்த சந்தேகங்களையும் கவலையையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

நமது முன்னாள் படைவீரர்களின் சேவை மற்றும் ஒழுக்கத்தை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கை கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் வாய்ப்புகளை தேடி போராடி வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையான காவலர் பணிக்குஅ ராணுவ நிபுணத்துவம் தேவையில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.

மேலும், இந்தக் கொள்கை நீண்டகால சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிவர்த்தி செய்யத் தவறும் ஒரு குறுகிய கால பாதுகாப்பு தீர்வாகக் கருதப்படலாம். உள்ளூர் இளைஞர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணான பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் பங்கேற்பையும் வளர்க்கும்.

இவ்வாறு மெகபூபா முஃப்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News