இந்தியா

கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மாயாவதி

Published On 2024-02-20 05:49 GMT   |   Update On 2024-02-20 05:49 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது.
  • கூட்டணி குறித்த தேவையற்ற வதந்திகளை கட்சித் தொண்டர்கள் நம்ப வேண்டாம்.

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அழைப்பு விடுத்த நிலையில் மாயாவதி அதை அதிரடியாக நிராகரித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் மாயாவதி கூறுகையில், "கூட்டணி குறித்த தேவையற்ற வதந்திகளை கட்சித் தொண்டர்கள் நம்ப வேண்டாம். இதில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி இல்லாமல் சில கட்சிகளால் பலன் பெற முடியாது என்பது தெரிய வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது." என்றார்.

Tags:    

Similar News