இந்தியா

மம்தா பானர்ஜி

பா.ஜ.க.வின் நண்பர்களுக்காக மக்களின் பணம் பயன்படுத்தப்படுகிறது - மம்தா பானர்ஜி

Published On 2023-02-03 01:37 IST   |   Update On 2023-02-03 01:37:00 IST
  • எல்.ஐ.சியில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை பாஜக தங்கள் கட்சி நலனுக்காக செயல்படுத்துகிறது.
  • எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்கப்படும் விதத்தைப் பார்த்தால் அச்சம் ஏற்படுத்துகிறது.

கொல்கத்தா:

எல்.ஐ.சி. மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் எல்.ஐ.சி. அதிக அளவில் பாதிக்கப்படும். எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்கப்படும் விதத்தைப் பார்த்தால் அச்சம் ஏற்படுத்துகிறது. எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள மக்களின் பணம் பா.ஜ.க.வுக்கு உதவியாக உள்ள அவர்களது நண்பர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பதே உங்களுக்குத் தெரியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News