இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேட்புமனுத் தாக்கல்

Published On 2024-10-28 20:08 IST   |   Update On 2024-10-28 20:08:00 IST
  • நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவுடைய உள்ளது.
  • பஞ்பகாடி தொகுதியில் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்

மகாராஷ்டிர சட்டமன்றதிற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 299 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடக்க உள்ள இந்த வாக்குபதிவின் முடிவுகள் நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவுடைய உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைருமான ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின் போது அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News