இந்தியா

இரண்டு சிறுவர்கள் சினிமா படத்துடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவை தாக்கிய பிரதமர் மோடி

Published On 2024-04-06 10:28 GMT   |   Update On 2024-04-06 10:28 GMT
  • இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.
  • காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்ளை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.

பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன்மூலம் இன்றைய காங்கிரஸ் இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதேநிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் விசித்திரமானது. அனைத்து தொகுதிக்கான வேட்பாளர்களை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.

ஸ்திரதன்மையற்ற அல்லது நிலையற்ற என்ற மற்றொரு பெயராகியுள்ளது இந்தியா கூட்டணி. இதனால்தான் அந்த கட்சி சொல்லும் ஒரு விசயத்தை கூட நாட்டு மக்கள் இன்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை இரண்டு சிறுவர்கள் (Two Boys- do ladke) என்ற படம் படுதோல்வி அடைந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது அந்த படம் இவர்களால் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை இரண்டு சிறுவர்கள் என மறைமுகமாக தாக்கினார்.)

எத்தனை முறை இந்த இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மரப்பானையை தீ மீது வைப்பார்கள் எனத் தெரியவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நகினா (எஸ்சி), மொராபாபாத், ராம்பூர், பிலிபிட் ஆகிய 8 தொதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.

2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

Tags:    

Similar News