இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராப் பாடகர் வேடனுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

Published On 2025-08-27 18:13 IST   |   Update On 2025-08-27 18:13:00 IST
  • 2021 முதல் 2023 முறை ஒன்றாக இருந்தோம்.
  • அந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்ததாக பெண் டாக்டர் குற்றச்சாட்டு.

கேரளாவின் பிரபல ராப் பாடகர் வேடன். வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி மீது பெண் டாக்டர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.

வேடன் 2021 முதல் 2023 வரை தாங்கள் ஒன்றாக இருந்தோம். பின்னர் பிரிந்துவிட்டோம். ஒன்றாக இருந்தபோது பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் டாக்டர் புகார் அளித்திருந்தார்.

இருவரும் ஒன்றாக இருந்து பல சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுப்பது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டு, அது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் கைதுக்கும் வழிவகுத்தால், ஒரு தனிநபரின் எதிர்காலத்தை அழிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News