இந்தியா

பயணிகளுக்கு ரூ.827 கோடி Refund- இண்டிகோ நிறுவனம்

Published On 2025-12-08 17:52 IST   |   Update On 2025-12-08 17:52:00 IST
  • இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது.
  • டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில், பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடி திருப்பித்தந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது.

மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் 48 மணி நேரத்தில் பயணிகளின் 4500 உடமைகளை திருப்பித் தந்துள்ளது.

பயணிகளின் 9000-க்கும் மேற்பட்ட லக்கேஜூகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News