இந்தியா

ஏப்ரல்- ஜூன் மாத இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம்: எதிர்பார்த்ததைவிட அதிகம்..!

Published On 2025-08-29 18:49 IST   |   Update On 2025-08-29 18:49:00 IST
  • 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கணித்திருந்தது.
  • விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி.ஐ. கணித்ததைவிட அதிகமாகும். பண்ணைத்துறை (farm Sector), வர்த்தகம், ஓட்டல், நிதி மற்றம் ரியல் எஸ்டேட் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 8.4 சதவீதமாக இருந்தது. அதன்பின் ஐந்து காலண்டிற்குப் பிறகு தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் ஆர்.பி.ஐ., 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும், முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்திருந்தது.

டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு தற்போது அமலில் உள்ளது. இதன் தாக்கம் 2ஆவது காலாண்டில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News