இந்தியா

ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலை குறைப்பு- இந்திய ரெயில்வே

Published On 2025-09-20 16:55 IST   |   Update On 2025-09-20 17:01:00 IST
  • ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை அதிரடியாக குறைத்து இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
  • 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரெயில் பயணங்களின் போது மக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும் அரை லிட்டர் (500 ml) ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை ரூ.1 குறைத்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் மற்ற தண்ணீர் பாட்டில்கள் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் (500 ml) பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

மேலும் தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

இது வரும் 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News