இந்தியா

காஷ்மீர் தாக்குதலுக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்கும்- மோகன் பகவத்

Published On 2025-04-25 12:35 IST   |   Update On 2025-04-25 12:35:00 IST
  • நாம் ஒற்றுமையாக இருந்தால், யாரும் நம்மை தீய நோக்கத்துடன் பார்க்கத் துணிய மாட்டார்கள்.
  • வெறுப்பும் விரோதமும் நமது இயல்பில் இல்லை.

புதுடெல்லி:

காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியதாவது:-

பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களிடம் பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தைப் பற்றி கேட்ட பிறகு கொன்று உள்ளனர்.

இந்துக்கள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்த போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலானது. எங்கள் இதயங்களில் வலி இருக்கிறது. நாங்கள் கோபமாக இருக்கிறோம். ஆனால் தீமையை அழிக்க, வலிமை காட்டப்பட வேண்டும். இதுபோன்ற துயரங்களைத் தடுக்கவும், தீங்கிழைக்கும் நோக்கத்தைத் தடுக்கவும் சமூகத்திற்குள் ஒற்றுமை அவசியம்.

நாம் ஒற்றுமையாக இருந்தால், யாரும் நம்மை தீய நோக்கத்துடன் பார்க்கத் துணிய மாட்டார்கள். வெறுப்பும் விரோதமும் நமது இயல்பில் இல்லை. ஆனால், தீங்குகளை அமைதியாக சகித்துக்கொள்வதும் இல்லை. உண்மை யிலேயே வன்முறையற்ற ஒருவர் வலிமையானவராகவும் இருக்க வேண்டும். தேவைப்படும்போது அது புலப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News