வங்கி பணியாளர்களுக்கு வட்டார மொழி தெரிந்திருப்பது அவசியம்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு மும்பையில் நடைபெற்றது.
- இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
மும்பை:
மும்பையில் ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டிற்கு பெரிய அளவிலான, உலகத்தரத்திலான வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கியும் மற்ற பிற வணிக வங்கிகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.
தொழில் துறைக்கு கடன் ஓட்டத்தை மேலும் விரிவுபடுத்த வங்கிகளைக் கேட்டுக்கொண்டார்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள தேவை, முதலீட்டை ஊக்குவித்து 'நல்ல வட்டச் சுழற்சி'யை உருவாக்கும்.
பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய பணியாளர்களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்க வேண்டும்.
வங்கி பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் உள்ளூரின் வட்டார மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு கிளையில் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரும் தனது வாடிக்கையாளரைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளூர் மொழியை பேசுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் அந்த வங்கியின் கிளை மானேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என தெரிவித்தார்.