இந்தியா

"ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில் பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் அழிப்பு- இந்தியா எல்லை பாதுகாப்புப்படை

Published On 2025-05-28 16:40 IST   |   Update On 2025-05-28 16:40:00 IST
  • டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
  • சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியாவின் முப்படைகள் கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தாக்குதல் நடத்தின. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.

இதுகுறித்து ஜம்மு பிராந்திய பி.எஸ்.எப். ஐ.ஜி. சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக பி.எஸ்.எப். வீரர்கள் வித்வன்ஸக் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதன்மூலம் 1,800 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட முடியும்.

தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதன்மூலம் 2,100 தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம். மேலும் 2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினோம்.

இந்த துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளை சுட முடியும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுமையாக தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் உள்ள கண்காணிப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 10-ந் தேதி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அப்போது ஒரு டிரோனில் இருந்து குண்டு வெடித்தது.

இதனால் எல்லை பாது காப்புபடை சப்-இன்ஸ் பெக்டர் முகமது இம்தியாஸ், காவலர் தீபக்குமார், ராணுவ வீரர் நாயக்சுனில் குமார் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

மறைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பெயரை, எல்லையில் உள்ள இரண்டு நிலைகளுக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம். சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News