இந்தியா

பீகாரில் நிதிஷ்குமார் அணியை உடைக்க இந்தியா கூட்டணி முயற்சி

Published On 2024-03-07 09:59 GMT   |   Update On 2024-03-07 09:59 GMT
  • நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது
  • பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்றும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு பீகாரில் 8 எம்.பி. தொகுதியும், உத்தர பிரதேசத்தில் 2 தொகுதியும் தருவதாக கூறியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இந்த கட்சிக்கு 6 இடங்கள் மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News