இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை கிழித்து குப்பையில் வீசுவோம்- ராகுல் காந்தி

Published On 2024-05-23 06:45 GMT   |   Update On 2024-05-23 06:45 GMT
  • இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்.
  • பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 5 கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து, அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும்.

22 பில்லியனர்களுக்கு தள்ளுபடி செய்தது போல், தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் மோடியிடம் ஒவ்வொரு முறையும் கேட்கின்றனர்.

கேட்கும் ஒவ்வொரு முறையும், பிரதமர் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் செய்ய மாட்டார்.

ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்யப் போகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News