இந்தியா

அமலாக்கத்துறை 5-வது முறையாக சம்மன்: அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராவாரா ?

Published On 2024-01-31 15:24 IST   |   Update On 2024-01-31 15:52:00 IST
  • தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்ட விரோதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடரந்து குற்றம்சாட்டி வருகிறார்.
  • இருந்த போதிலும் அமலாக்கத்துறை தொடந்து சம்மன் அனுப்பி வருகிறது.

டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதனால் அவருக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். இந்த சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், முதல் சம்மனை திருப்பி அனுப்பினார். அதன்பின் தொடர்நது இரண்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் ஆஜராக நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி பரபரப்பான தகவலை வெளியிட்டார். ஆனால் சோதனையும் நடத்தப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான் 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வருகிற 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுவாரா? என்பது சந்தேகம்தான்.

Tags:    

Similar News