இந்தியா

சித்தராமையாவை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவோம்: விஜயேந்திரா

Published On 2023-04-02 03:34 GMT   |   Update On 2023-04-02 03:34 GMT
  • வருணா பா.ஜனதாவின் கோட்டை.
  • கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர் என கருதப்படும் சித்தராமையா, மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இதனால், சித்தராமையாவை வீழ்த்த பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சிகள் ஆலோசித்து வருகிறது. பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், எடியூரப்பா இதனை மறுத்துள்ளார். விஜயேந்திரா வருணாவில் போட்டியிட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயேந்திரா கூறுகையில், வருணா பா.ஜனதாவின் கோட்டை. அங்கு பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். வருணாவில் சித்தராமையாவை விட பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இதை யாரும் உடைக்க முடியாது. வருணாவில் என்னை போட்டியிடும்படி கட்சி மேலிடம் கூறினால், கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால் எனது தந்தை, சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

Tags:    

Similar News