அத்வானிக்கு பாராட்டு: சசிதரூர் மீது காங்கிரஸ் அதிருப்தி
- அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.
- சசிதரூரின் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்து கொண்டு சசிதரூர் எம்.பி. அடிக்கடி பாராட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.
நேரு, இந்திரா காந்தியை மேற்கோள்காட்டி அத்வானியை புகழ்ந்தார். அத்வானியின் நீண்ட கால சேவையை ஒரு அத்தியாயத்தை கொண்டு தீர்மானிப்பது நியாயமற்றது. அவருக்கும் அதே மரியாதையை நாம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிதரூரின் இந்த கருத்து தொடர்பாக அவர் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் பவன் கேரா கூறும்போது,"இது சசிதரூரின் தனிப்பட்ட கருத்து. அவர் எப்போதும் போலவே தனக்காக பேசுகிறார்.
அவரது சமீபத்திய அறிக்கையில் இருந்து காங்கிரஸ் விலகி இருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்து கொண்டு அவர் தொடர்ந்து இப்படி செயல்டுவது சரியானதல்ல" என்றார்.