இந்தியா

காங்கிரசில் இருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்த மூத்த தலைவர்

Published On 2023-11-12 11:30 IST   |   Update On 2023-11-12 11:30:00 IST
  • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
  • பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே அங்கு போட்டி நிலவுகிறது.

ஐதராபாத்:

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரவந்தி நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இன்று இணைந்தார். செயல் தலைவர் கே.டி.ராமாராவ் முன்னிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சி ஒருவரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என குற்றம்சாட்டினார்.

இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியில் இருந்து விலகியது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News