இந்தியா

எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: அசோக் கெலாட்

Published On 2023-11-30 10:35 GMT   |   Update On 2023-11-30 10:35 GMT
  • ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.
  • அன்று பதிவான வாக்குகள் வரும் 3-ம் தேதி எண்ணப்படுகிறது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளைக் கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 25-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர். ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News