இந்தியா

இந்தியாவின் முன் இருக்கும் 6 முக்கிய சவால்கள் - பட்டியலிட்ட முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான்

Published On 2025-09-06 04:45 IST   |   Update On 2025-09-06 04:45:00 IST
  • பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால்.
  • வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆறு முக்கிய சவால்கள் உள்ளன என்று முப்படை தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனில் சவுகான், சீனாவுடனான தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால். இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை அல்ல. அதனால்தான் தயார்நிலை அவசியம்.

மூன்றாவது பெரிய சவால் அண்டை நாடுகளில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை. இது வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

நான்காவது சவால் போரின் தன்மையில் முழுமையான மாற்றம். தற்போது போர்கள் விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் வரை பரவியுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அணுசக்தித் திறன்கள் ஐந்தாவது சவால். இராணுவ தொழில்நுட்பத்தில் விரைவான மாற்றங்கள் ஆறாவது பெரிய சவால்" என்று தெரிவித்தார்.

எனவே அவற்றை எதிர்கொள்ள நாடு தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  

Tags:    

Similar News