இந்தியா
திருப்பதி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து- சென்னை பக்தர்கள் 3 பேர் படுகாயம்
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்து உருண்டது.
- மலைப்பாதையில் கார் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பதி:
சென்னையை சேர்ந்த 3 பக்தர்கள் நேற்று காலை திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை தரிசனம் முடிந்து மீண்டும் சென்னைக்கு காரில் புறப்பட்டனர்.
இன்று காலை 9 மணி அளவில் கார் அலிபிரி மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்து உருண்டது.
இதில் காரில் வந்த 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அலிபிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாதையில் கார் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.