இந்தியா
திடீரென தீப்பிடித்த பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 50 பயணிகள்
- புகை வருவதை கவனித்த டிரைவர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
- மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
தானே:
மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று காலையில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நார்போலியில் இருந்து சேந்தனி கோலிவாடா பகுதிக்கு சென்ற அந்த பேருந்து காலை 8.30 மணியளவில் மத்திய மைதானத்தின் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது.
என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை கவனித்த டிரைவர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.