இந்தியா
மொழி எமர்ஜென்சியை அமல்படுத்திய ஆளுங்கட்சி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
- நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல.
- அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியில் உள்ள அஜித் பவார் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சி செய்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல. அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாஜக மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஆளும்கட்சி மொழி எமர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.