இந்தியா

தெலுங்கு தேசம் கூட்டணியில் 7 தொகுதி கேட்டு அடம்பிடிக்கும் பா.ஜ.க.

Published On 2024-03-01 05:51 GMT   |   Update On 2024-03-01 05:51 GMT
  • தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது.
  • சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது. அதற்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு 94 வேட்பாளர்களையும், ஜனசேனா கட்சிக்கு 24 இடங்களையும் ஒதுக்கி வேட்பாளர்களை அறிவித்தனர். மீதமுள்ள 57 இடங்களை நிலுவையில் வைத்துள்ளது.

தெலுங்கு தேசம் கூட்டணியில் கட்டாயம் 7 இடங்களுக்கு மேல் ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. அடம்பிடித்து வருகிறது. ஆனால் 4 முதல் 5 தொகுதிகளை ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

சில நாட்களில் பா.ஜ.க. தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வருவதால் விரைவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்படும் என நம்புகிறோம் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News