இந்தியா
- பீகாரில் மாம்பழ சீசன் களை கட்டி உள்ள நிலையில் தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மை துறையால் மாம்பழம் உண்ணும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
- மேற்கு சம்பாரன் தொட்டியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் மாம்பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
பீகாரில் மாம்பழ சீசன் களை கட்டி உள்ள நிலையில் தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மை துறையால் மாம்பழம் உண்ணும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மேற்கு சம்பாரன் தொட்டியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவர்கள் முன்பு ஒரு தட்டில் நிறைய மாம்பழங்கள் வைத்திருந்தார்கள். அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் சாப்பிட்டு முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.