இந்தியா

அழுத்தம் கொடுத்த மேனேஜரை அடித்து நொறுக்கிய அடியாட்கள் - வைரலாகும் வீடியோ

Published On 2024-04-07 15:00 GMT   |   Update On 2024-04-07 15:00 GMT
  • வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
  • நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு நகரில் பட்டப்பகலில் நபர் ஒருவரை நான்கைந்து பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் யார், அவர் ஏன் பொது வெளியில் அப்படியான தாக்குதலுக்கு ஆளானர் என்ற காரணங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில், இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான நபர் சுரேஷ் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இவர் அதே நிறுவனத்தை சேர்ந்த உமாசங்கர் மற்றும் வினீஷ் என்ற இரு ஊழியர்களிடம் அதிவேகமாக வேலை செய்ய வலியுறுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக உமாசங்கர் மற்றும் வினீஷ் இணைந்து வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் கோபமுற்ற இவர்கள் மேலாளரை அடியாட்கள் வைத்து தாக்குதல் நடத்துவதென முடிவு எடுத்தனர். அப்படியாக இருவரும் இணைந்து மேலாளரை தாக்குவதற்கு அடியாட்களை தேர்வு செய்துள்ளனர்.

இருவரின் வலியுறுத்தலின் பேரிலேயே சம்பவத்தன்று பொது வெளியில் மேலாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ அதே பகுதியில் வந்த கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகளே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

வீடியோவை வைத்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News