இந்தியா

ஜாமின் மனு தள்ளுபடி- சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல் உறுதி

Published On 2023-09-10 20:45 IST   |   Update On 2023-09-11 01:17:00 IST
  • சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு.
  • சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜாமின் மனு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்ப குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையை உறுதி செய்தது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு குற்றப்பிரிவு நீதிமன்றம்.

மனு தள்ளுபடி செய்ததன் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News