இந்தியா
மீட்டிங்கில் ராகுல் காந்திக்கும் உ.பி. அமைச்சருக்கும் இடையே வெடித்த வாக்குவாதம் - வீடியோ வைரல்
- மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்? என்று கேட்டார்.
- ரேபரேலி எம்.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் ரேபரேலி எம்.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தின் நடுவில் அமைச்சர் தினேஷ் பேசியதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
கூட்டத்திற்கு தான் தலைமை தாங்குவதாகவும், கூட்டத்தில் பேச விரும்பினால் முதலில் அனுமதி பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்? என்று கேட்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.