இந்தியா

ஆந்திராவில் கிணற்றில் கார் பாய்ந்து 3 பேர் பலி

Published On 2025-05-18 10:15 IST   |   Update On 2025-05-18 10:15:00 IST
  • கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், பீலேரு அடுத்த பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது..

அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு அதில் இருந்த 3 பேரின் உடல்களை பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News