இந்தியா

ஆமா.. இந்த ஜெகதீப் தன்கர்.. என ஆரம்பித்த கார்கே.. மாநிலங்களவையில் கொதித்தெழுந்த பாஜக எம்.பி.க்கள்

Published On 2025-12-02 01:52 IST   |   Update On 2025-12-02 01:52:00 IST
  • 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
  • பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.

14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.

அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.

அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.

அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.

கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.

இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News