குடித்துவிட்டு அரசியலமைப்பு எழுதினர்-பரவும் கெஜ்ரிவாலின் பழைய வீடியோ: வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி
- ஆம் ஆத்மி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதே வீடியோவை பா.ஜ.க.வும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
சண்டிகர்:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவைப் பகிர்ந்ததற்காக சில சமூக ஊடக பயனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் டெல்லியைச் சேர்ந்த விபோர் ஆனந்த் என்ற வழக்கறிஞர் உள்பட 5 சமூக ஊடக பயனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், எந்தத் தொழிலாளியும் மது அருந்தக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனம் கூறுகிறது. அரசியலமைப்பை எழுதியவர் அதை எழுதும்போது குடிபோதையில் இருந்திருக்க வேண்டும் என எங்களில் ஒருவர் கூறினார் என பேசுவதாக பதிவாகி உள்ளது.
லூதியானாவில் 5 மற்றும் பஞ்சாபில் 12 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் கெஜ்ரிவாலின் இமேஜை கெடுத்து விட்டதாகவும், எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதே வீடியோவை பா.ஜ.க. எம்.பி மனோஜ் திவாரியும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.