மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை தீயில் கருகி உயிரிழந்த சோகம்!
- உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
- மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. அப்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.
இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.