இந்தியா

காங்கிரசும், பா.ஜ.க.வும் தங்கள் கஜானாவை நிரப்புவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை: கெஜ்ரிவால் ஆவேசம்

Published On 2023-11-08 14:11 GMT   |   Update On 2023-11-08 14:11 GMT
  • ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் போபாலில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
  • அப்போது, ஆம் ஆத்மியின் நேர்மையை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர் என கூறினார்.

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் பேரணியாக சென்று வாக்கு கேட்டனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

75 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பாஜ.க ஆகிய கட்சிகளால் சாதிக்க முடியாததை ஆம் ஆத்மி கட்சி 5 ஆண்டுகளில் சாதித்துள்ளது.

டெல்லி மக்களுக்கு மின்சாரம் கூட இலவசமாக வழங்கப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 2 கட்சிகள் மட்டுமே இருந்தன. இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கஜானாவை நிரப்புவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாங்கள் ஆம் ஆத்மியை உருவாக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News