இந்தியா
ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்

தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்- பயணிகள் பீதி

Published On 2022-03-12 12:28 GMT   |   Update On 2022-03-12 12:28 GMT
விமானம் புல்தரையில் நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஜபல்பூர்:

டெல்லியில் இருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், 55 பயணிகளுடன் மத்திய பிரதேசம் ஜபல்பூர் நகருக்கு புறப்பட்டது. இன்று மதியம் விமானம் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியது. விமானம் ஓடுபாதையில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்கு வெளியே சென்றுவிட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பீதியடைந்தனர்.  

ஆனால், விமானம் புல்தரையில் நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணித்த  பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

நடந்த சம்பவம் குறித்து அலையன்ஸ் ஏர் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறி உள்ளது.
Tags:    

Similar News