செய்திகள்
எடியூரப்பா

பசவராஜ் பொம்மையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: எடியூரப்பா

Published On 2021-11-13 03:36 GMT   |   Update On 2021-11-13 04:22 GMT
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது, பிட்காயின் முறைகேடு போன்றவற்றால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ‘‘முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை மாற்றும் பேச்சுக்கே இல்லை. அவர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News