செய்திகள்

கவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்

Published On 2019-05-25 18:19 IST   |   Update On 2019-05-25 18:19:00 IST
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று கவர்னரை சந்தித்து ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஐதராபாத்:

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News