செய்திகள்
ராகுலை அவமானப்படுத்துவதா?- ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கண்டனம்
அமேதி தொகுதி மக்களுக்கு காலணிகளை வழங்குவதன் மூலம் ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என்று நினைப்பதாக ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #SmritiIrani #PriyankaGandhi
அமேதி:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள வாக்காளர்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் ஓட்டுக்காக யார் உங்களிடம் யாசகம் கேட்கிறார்கள். ஸ்மிருதி இரானி வெளிஆள். அவர் அமேதி தொகுதி மக்களுக்கு காலணிகளை வழங்குகிறார். இவ்வாறு அவர் செய்வதன் மூலம் ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதி மக்களைத்தான் அவமதிக்கிறார்.
இந்த தொகுதி மக்கள் விவேகமுள்ளவர்கள். அமேதியில் உணவு பூங்கா இப்போது வரை திறக்கப்படாமல் இருக்கிறது. அதை திறக்கப்போவது யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு பிரியங்கா கூறினார். #LoksabhaElections2019 #SmritiIrani #PriyankaGandhi
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள வாக்காளர்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமேதி, ரேபரேலி பாராளுமன்ற தொகுதி மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். அவர்கள் யாரிடமும் யாசகம் பெற மாட்டார்கள். அவ்வாறு யாராவது ஒருவர் யாசகம் பெற்றால் அவர் பா.ஜனதாவை சேர்ந்தவராகத்தான் இருப்பார்.
இந்த தொகுதி மக்கள் விவேகமுள்ளவர்கள். அமேதியில் உணவு பூங்கா இப்போது வரை திறக்கப்படாமல் இருக்கிறது. அதை திறக்கப்போவது யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு பிரியங்கா கூறினார். #LoksabhaElections2019 #SmritiIrani #PriyankaGandhi