செய்திகள்

தேர்தலை புறக்கணிக்குமாறு வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டு எச்சரிக்கை

Published On 2019-04-09 01:33 GMT   |   Update On 2019-04-09 01:33 GMT
தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #LokSabhaElection #Maoist #BoycottElection
வயநாடு:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 23-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று காணப்பட்டன.

அதில், தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி தெரிவித்தார்.

கடந்த மாதம் 6-ந் தேதி, மாவோயிஸ்டு தலைவர் ஜலீல், துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதில் இருந்தே வயநாட்டில் போலீசார் உஷார்நிலையில் இருந்து வருகிறார்கள். #LokSabhaElection #Maoist #BoycottElection 
Tags:    

Similar News