செய்திகள்

அமேதி மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வயநாட்டுக்கு ஓட்டம்பிடித்த ராகுல் - அமித் ஷா கிண்டல்

Published On 2019-03-31 10:13 GMT   |   Update On 2019-03-31 10:13 GMT
அமேதி தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி இந்தமுறை வயநாட்டுக்கு ஓட்டம்பிடிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை விடுதலை செய்துவிட்டு இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்காக காங்கிரஸ் அரசு அசிமானந்தாவை சிறைக்கு அனுப்பியது என்று குற்றம்சாட்டினார்.



இந்த மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி தற்போது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஒட்டம் பிடித்திருக்கிறார் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
Tags:    

Similar News